தைப்பூசத்தை முன்னிட்டு குழந்தை பழனி ஆண்டவருக்கு 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு
கோயமுத்தூர் மாவட்டம் சூலூரில் மிகவும் பழமை வாய்ந்த குழந்தை பழனியாண்டவர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழாவை விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள் அதன் தொடர் நிகழ்வாக இந்த ஆண்டு 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் தீர்த்த குடம் எடுத்து வந்து முருகனை வழிபட்டனர். இதில் முதல்முறையாக ஏராளமான இளம் பெண்கள் முருகனுக்கு பால்குடம் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தை பழனியாண்டவர் திருத்தேரில் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி சூலூர் வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து அன்னமடம் வீதியில் அமைந்துள்ள திருக்கோவில் வரை பால்குடங்கள் ஜமாப் இசை,காவடி, சிலம்பாட்டத்துடன் ஊர்வலமாக வந்தது திருத்தேரினை முன்னாள் அமைச்சரும் கோயம்புத்தூர் மாநகரின் மேயருமான செ.ம.வேலுச்சாமி துவக்கி வைத்தார். ஊர்வலத்தில் முன்னாள் சிறைத்துறை அதிகாரி அண்ணாதுரை, திருக்கோவில் தங்கவேல், பூசாரி வடிவேல் ஆகியோர் நிகழ்வினை ஒருங்கிணைத்து நடத்தினர். தொடர்ந்து முருக பெருமானுக்கு அபிஷேகங்கள் நடைபெற்று அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன.
விழாவிற்கு வருகை புரிந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.