அரியலூர், அக்;04
அரியலூர் (நெடுஞ்சாலை), கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, கோட்டத்தின் கட்டுபாட்டிலுள்ள செந்துறை உட்கோட்டத்தை சார்ந்த அரியலூர் – ஜெயங்கொண்டம் (வழி) செந்துறை சாலையில் செந்துறை முதல் பொன்பரப்பி வரை முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் இருவழிச்சாலையை நான்குவழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகளை கண்காணிப்பு அலுவலர் எம்.விஜயலட்சுமி ஆய்வு செய்தார். பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடிக்க அறிவுரைகள் வழங்கினார் , மேலும் ஆய்வின் போது உடன் மாவட்ட ஆட்சியர் அரியலூர் ரெத்தினசாமி. செந்துறை நெடுஞ்சாலை துறை உதவிக்கோட்டப் பொறியாளர், உதவிப்பொறியாளர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்