சங்கரன்கோவில். ஏப்.1
தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவிலில் இஸ்லாமியர்கள் நேற்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ராஜபாளையம் சாலையில் உள்ள ஈத்கா திடலில் சிறப்பு தொழுகை நடத்தினர். தொழுகை முடிந்து வந்த இஸ்லாமியர்களுக்கு நேரில் சென்று தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமையில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்
மாவட்ட துணை செயலாளர் புனிதா, யூனியன் சேர்மனும்,சங்கரன்கோவில் தெற்கு ஒன்றிய கழக செயலாளருமான லாலா சங்கரபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் சந்திரன், நகர அவை தலைவர் முப்புடாதி, நகர துணை செயலாளர் முத்துக்குமார், வார்டு செயலாளர்கள் காளிச்சாமி பாண்டியன், கணேசன், வைரவேல் சுப்பிரமணியன் , சுப்பிரமணியன், மணிகண்டன், மகா மாரியப்பன், வீராச்சாமி முத்து , வீரமணி , தடிகாரன், இளங்கோ மாரியப்பன், பழனிச்சாமி மற்றும் ராமலிங்கம், மாணவரணி வெங்கடேஷ் , அஜய்மகேஷ்குமார், நகர விவசாய அணி அமைப்பாளர் காந்திநகர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.