தருமபுரி மாவட்டத்தில் அமைச்சர் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பு
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த பாலஜங்கமன அள்ளியில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு 524- பயனளிகளுக்கு வீட்டு மனை பட்டா, உதவித்தொகை என 5 கோடிய 24 லட்சத்து 35 ஆயிரத்து 965 ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் சித்தேரி ஊராட்சிக்கு உட்பட்ட கலசப்பாடி முதல் அரசநத்தம் வரை உள்ள மலை கிராமங்களுக்கு ரூ. 12 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில்தார் சாலை மற்றும் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்தும், நல திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். உடன் மவட்ட ஆட்சியர் சாந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் மணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தடங்கம்
சுப்ரமணி, பழனியப்பன், சண்முகம், முன்னாள் மாவட்டச் செயலாளர் இன்பசேகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேடம்மாள்மற்றும் அரசு துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். தருமபுரியில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
பின்னர் செய்தியாளர்களிடம்அவர் கூறியதாவது. தருமபுரியில் ரூ. 36 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடம் விரைவில் திறக்கப்படும் .இதே போல் தருமபுரி- வெண்ணாம்பட்டி இடையே 66 அடி சாலை வழியாக ரூ . 37 கோடி மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்க அரசாணை பெறப்பட்டுள்ளது. இந்த பணி விரைவில் தொடங்கப்படும். தருமபுரி சிப்காட் தொழில் பேட்டையில் முதல் கட்டமாக 200 ஏக்கர் பரப்பளவில் தொழிற்சாலை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இணைத்தளம் மூலம் பதிவு செய்து விண்ணப்பிப்பவர்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.