நீலகிரி மே 19
நீலகிரி மாவட்டம் குன்னூரில், ஆசிரியர்களுக்கான சாரண சாரணியர் இயக்கத்தின் துவக்கப் பயிற்சி முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
Basic Flock Leaders, Basic Guide Captains, Basic/Advanced/HWB Ranger Leaders போன்ற பதவிகளுக்கான இந்த பயிற்சியில் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.
பெண்களுக்காக மட்டும் நடத்தப்படும் இந்தச் சிறப்பு முகாமை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பார்வையிட்டு, முகாமில் பங்கேற்ற பயிற்சியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்த முகாம், பெண்கள் ஆசிரியர்களிடையே சாரணியர் இயக்க விழிப்புணர்வையும், தலைமைத்திறனையும் வளர்க்கும் நோக்கத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.