மாநில அளவிலான ஆண்களுக்கான குத்துச்சண்டை போட்டியை எம்எல்ஏ நிவேதாமுருகன் தொடக்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 2024 – 2025 ஆம் ஆண்டுக்கான பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின மாநில அளவிலான குத்துச்சண்டை விளையாட்டு போட்டி நடைபெற்றது. கடந்த 28-ஆம் தேதி தொடங்கிய இப்போட்டியில் முதல் மூன்று நாட்கள் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று ஆண்களுக்கான போட்டிகள் தொடங்கின. இந்த போட்டியை மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும், பூம்புகார் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏவுமான நிவேதா எம்.முருகன் தொடக்கி வைத்தார். தொடர்ந்து அவர் மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பதக்கங்களையும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டி பேசினார். இதில் நகர மன்ற தலைவர் செல்வராஜ், நகர்மன்ற உறுப்பினர்கள் ரஜினி, ரிஷி, மாவட்ட துணை செயலாளர் செல்வமணி, திமுக தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், நகர துணை செயலாளர் சங்கர்,மற்றும் உடற்கல்வி ஆய்வாளர்கள், நடுவர்கள், மாணவர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.