காளையார் கோவில்:
மார்ச்:11
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் வட்டம் மேலச்சேத்தூர் கிராமத்தில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோயில் உள்ளது. இந்தக் கோவில் சுமார் இரண்டாயிரம் ஆண்டு பழமையான ஸ்ரீ மரகதவள்ளி அம்பாள் சமதே ஸ்ரீ சந்திரசேகரர் சுவாமி திருக்கோவில் கோவில் உள்ளது.
இந்தக் கோவில் பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது. இந்தக்கோவிலின் குடமுழுக்கு விழாவானது மிகவும் சிறப்பாக நடைபெற்றது. சிவகங்கை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர்
இராணி சாஹிபா டி. எஸ். கே. மதுராந்தகி நாச்சியார் முன்னிலையில் சிவாச்சார்யர்களின் மூலம் புனிதநீர் கும்பக்கலசங்களில் ஊற்றி புனித குடமுழுக்கு விழா நடைபெற்றது.
குடமுழுக்கு விழா முடிந்ததும் பக்தர்களுக்கு பொது அன்னதானம் வழங்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் வள்ளல் பச்சேரி சி. ஆர். சுந்தரராஜன் பொது அன்னதானத்தின் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்.
இந்த குடமுழுக்கு விழாவில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான ஊழியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.