அரியலூர், ஜன;07
அரியலூர் மாவட்ட தலைநகரில் அண்ணா சிலை அருகில் தேமுதிகவின்
பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆணைக்கிணங்க மாவட்ட செயலாளர்
ராமஜெயவேல் தலைமையில் “அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்தும்” “தமிழக அரசு பொங்கல் தொகுப்புடன் ரூபா 1000/- வழங்க கோரியும்” பொறியாளர் அணி துணை செயலாளர்
ராஜாபன்னீர்செல்வம் தமிழக அரசுக்கு எதிராக கண்டன உரையாற்றினார், முன்னதாக அரியலூர் நகர செயலாளர் தாமஸ்ஏசுதாஸ் அனைவரையும் வரவேற்று கண்டன உரையாற்றினார். மாவட்டத் அவைத்தலைவர் வேல்முருகன் , மாவட்ட பொருளாளர் சக்திவேல், மாவட்டத் துணைச் செயலாளர் சக்திபாண்டி , மாவட்ட துணை செயலாளர் புல்லட் ரவி, பொதுக்குழு உறுப்பினர் மோகன்தாஸ், பொதுக்குழு உறுப்பினர் கருப்பையா, பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர் ஜெயவேல் ஆகியோர் முன்னிலையில் தேமுதிக கட்சியின் ஒன்றிய நகர நிர்வாகிகள் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக முழக்கமிட்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்