நாகர்கோவில், ஜூன் 1:
குமரி மாவட்டத்தில் முக்கிய நீர் ஆதாரமாக பேச்சிப்பாறை அணை விளங்கி வருகிறது. அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 1ம் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இதை யடுத்து கோதை ஆறு மற்றும் பட்டணங்கால் பாசன திட்ட பகுதிக்கு ஜூன் 1ம் தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி வரை பேச்சுப்பா றை, பெருஞ்சாணி, சிற்றார் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி கன்னிப் பூ சாகுபடிக்கு பேச்சுப்பாறை அணையில் இருந்து இன்று 1ம் தேதி காலை 11 மணிக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா தலைமையில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சுப்பாறை அணையில் இருந்து தண்ணீர் பாயும் மதகுகளை திறந்து வைக்கிறார்.
தமிழ்நாடு அரசின் உத்தரவுபடி கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசன அமைப்பில் பயன்பெறும் 79 ஆயிரம் ஏக்கர் நிலங்களின் பாசனத்திற்கு கணிப்பூ மற்றும் கும்பபூ சாகுபடிக்கு பேச்சுப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது.