திருப்பத்தூர்:செப்:18, திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த பூங்குளம் மதுரா பலப்பநத்தம் அடுத்த
வெள்ளை பிரியான் வட்டத்தில்
அருள்மிகு ஸ்ரீ வீர விநாயகர், அருள்மிகு ஸ்ரீ சீனிவாச பெருமாள் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோயில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முதல் நாள் வேத பாராயணம், விக்னேஸ்வர பூஜை மகா சங்கல்பம் தேவதா அனுக்ஞை,
மகா கணபதி ஓமம் நவகிரக ஹோமம் மஹா பூர்ணாஹூதி, அங்குரார் பப்பனம் பூஜை நடைபெற்றது.
மங்கள வாத்திய முழங்க அருள்மிகு ஸ்ரீ வீர விநாயகர், ஸ்ரீ சீனிவாச பெருமாள், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோபுர கலசத்திற்கு கலச நீர் போற்றிய தீப ஆராதனை செய்தனர் கோபுர கலச புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மூலவர் செல்வ ஸ்ரீ வீர விநாயகர், ஸ்ரீ சீனிவாச பெருமாள், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜைகள் செய்யப்பட்டது.
இதில் பூங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட முப்பதுக்கு மேற்பட்ட கிராம மக்கள், ஆலங்காயம், திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆலாங்காயம், மிட்டூர், ஆண்டியப்பனூர் குருசிலாப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர் மகா அன்னதானம் நடைபெற்றது.
வீராங்குப்பம் ஸ்ரீ தேவராஜ் சர்மா குருக்கள் குழுவினர் கும்பாபிஷேக பூஜை செய்தனர்.
கும்பாபிஷேக விழா குழுவினர் பூங்குளம் பலபநத்தம் வெள்ளை பிரியான் வட்டம் கிராம VPN பாய்ஸ் மற்றும் ஊர்பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தார்கள்.