நாகர்கோவில் மே 23
தெரிசனங்கோப்பு அருள்மிகு ஸ்ரீதர நங்கை அம்மன் சாஸ்தா திருக்கோவில் காளி ஊட்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற அன்னதானத்தை தளவாய்சுந்தரம் எம் எல் ஏ தொடங்கி வைத்தார்.
தெரிசனங்கோப்பு அருள்மிகு ஸ்ரீதர நங்கை அம்மன் சாஸ்தா திருக்கோவில் காளி ஊட்டு விழா 19-05-2024 அன்று தொடங்கி 22-05-2024 வரை நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு இத் திருக்கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. கணபதி ஹோமம், திருவிளக்கு பூஜை, சிறப்பு தீபாராதனை, பரதநாட்டிய நிகழ்ச்சி, அம்மன் வெள்ளி கலைமானில் சிறப்பு அலங்கார வாகனத்தில் வீதி உலா, அன்னதானம், சிறப்பு தீபாராதனை ஊட்டு படைத்தல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
காளி ஊட்டு விழாவை முன்னிட்டு முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் இத்திருக்கோவிலுக்கு வருகை வந்து அம்மனை வழிபட்டார். அப்போது சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. காளி ஊட்டு விழாவை முன்னிட்டு மஹா அன்னதானத்திற்கு அவர் ஏற்பாடு செய்திருந்தார். இதனை அவர் தொடங்கி வைத்து உணவு பரிமாறினார்.
இவ்விழாவில் காளி ஊட்டு விழா பொறுப்பாளர்களும், கௌரவ ஆலோசகர்களுமான வள்ளிநாயகம் பிள்ளை, கோலப்பபிள்ளை, நாகராஜன், பாஸ்கரன், சொரிமுத்துபிள்ளை, வள்ளியம்மாள், எம்.சி.பிள்ளை, கீதாவேலப்பன், தலைவர் ஈஸ்வரப்பிள்ளை, துணைத் தலைவர் எஸ்.அருணாச்சலம், செயலாளர்கள் எல்.கணபதி, தாணுராஜன், சுப்பிரமணிய பிள்ளை ராஜேஷ், பொருளாளர்கள் ராஜ், நிலேஷ்ராம், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ஆறுமுகம், தெரிசனங்கோப்பு இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.