மதுரை மார்ச் 27,
மதுரை மீனாட்சியம்மன் உண்டியல் திறப்பு
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் இணை ஆணையர் செயல் அலுவலர் ச.கிருஷ்ணன் முன்னிலையில் இத்திருக்கோயில் மற்றும் 10 உபகோயில்களின் நிரந்தர உண்டியல்கள் திறப்பு நடைபெற்றது. உண்டியல் திறப்பின் போது திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் அவரது பிரதிநிதி. திருக்கோயில் அறங்காவலர்கள், மதுரை, அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், துணை ஆணையர் / செயல் அலுவலர். திருக்கோயில் கண்காணிப்பாளர்கள், மதுரை திருமங்கலம் மற்றும் கள்ளிக்குடி சரக ஆய்வர்கள், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் வங்கி பணியாளர்கள் கலந்து கொண்டார்கள். உண்டியல் திறப்பின் பொழுது ரொக்கம் ரூ.75,48,747/- (ரூபாய் எழுபத்து ஐந்து இலட்சத்து நாற்பத்து எட்டாயிரத்து எழுநூற்று நாற்பத்து ஏழு மட்டும்), பலமாற்று பொன் இனங்கள் 257 கிராம், பலமாற்று வெள்ளி இனங்கள் 429 கிராம் மற்றும் அயல் நாட்டு நோட்டுக்கள் 335 எண்ணம் கிடைக்க பெற்றுள்ளன.