மதுரை ஜனவரி 13,
மதுரை மாநகராட்சி அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் மதுரை கிழக்கு, திருப்பரங்குன்றம், மதுரை வடக்கு, மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதிகளில் புதிய பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்கு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்கள் இந்நிகழ்வில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர் மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், நகராட்சி நிரவாக இயக்குனர் சிவராசு, மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் தளபதி, பூமிநாதன், துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.