மார்ச்:2
திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருப்பூர் கொடிக்கம்பம் பகுதியில் நடைபெற்றது. மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இறை ஆர்.வெங்கடேஷ் தலைமை தாங்கினார். கழக தேர்தல் பிரிவுத்துணை செயலாளர், திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் மேயருமான அ.விசாலாட்சி, கழக இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஷோபனா நடராஜன், சிறுபான்மையினர் நலப்பிரிவு துணை செயலாளர்ஜான் மகேஷ் பிரான்ஸ்வா, குமரவேல், ஆசிக், பாஸ்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முடிவில் கலியமூர்த்தி நன்றி கூறினார். திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் மேயருமான அ.விசாலாட்சி பேசும் போது: புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு தாயாக வாழ்ந்து மக்களுக்கு நல்ல திட்டங்களை தந்தவர். ஏழைப் பெண்கள் வாழ்க்கை தரம் உயர பெண்களுக்கு தாலிக்கு தங்கம், திருமண உதவித் தொகை, விலையில்லா கிரைண்டர், மிக்ஸி, மின்விசிறி என்று அனைத்தையும் தந்து அழகுபார்த்தவர். அம்மா அவர்கள் மறைந்தாலும் மக்கள் இதயங்களில் வாழ்கிறார். என்றார்.
இந்த கூட்டத்தில் ஆர். சிவசக்தி, ஆர்.கே. கார்த்திகேயன் வரவேற்புரையாற்றினர். பாலுசாமி, வி.என்.எஸ்.லோகு, முத்துக்குட்டி, வினுப்பிரியா, கீதாராணி, திலகவதி, தங்கராஜ், சுகம் வீரகந்தசாமி, பாலகிருஷ்ணன், ஆனந் தகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.