ஜே சி ஐ தருமபுரி விங்ஸ் மற்றும் குளோபல் கிரேட்டிகள் கேர் மருத்துவமனை இணைந்து நடத்திய BLS என்னும் உயிர் காக்கும் சிகிச்சை விழிப்புணர்வு நிகழ்ச்சி சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு BLS பற்றிய விழிப்புணர்வு மற்றும் அவசர சிகிச்சை அளிப்பதற்கான பயிற்சி தேர்ச்சி பெற்ற நிபுணர்கள் மற்றும் மருத்துவர்களை கொண்டு நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுமார் 600 மாணவிகளுக்கு மெனிக்வின் மற்றும் நவீன கருவிகள் கொண்டு பயிற்சி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் குளோபல் கிரட்டிகள் கேர் மருத்துவமனையின் நிர்வாகி திருமதி குணசுந்தரி, மேலாளர் சண்முகம், அவசர சிகிச்சை பிரிவு நிபுணர்கள் தமிழரசி , சதீஷ் மற்றும் ஜே சி ஐ தர்மபுரி வின்ஸ் தலைவர் Jc நிவேதினி , நிர்வாகிகள் JFM Dr. கலைவாணி, Jc பிரபாகரன் Jc ஞானவேல், JJC சஞ்சனா மற்றும் கல்லூரி நிர்வாகி சிவக்கலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



