கன்னியாகுமரி:ஆக 1
குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் கீழசாலையில் நூலகங்கள் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.22 லட்சம் மதிப்பில் நூலக கூடுதல் கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி தலைவி அன்பரசி ராமராஜன் கலந்து கொண்டு கூடுதல் நூலக கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார்.
இதில்,பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா, அகஸ்தீஸ்வரம் ஊர் அறங்காவலர் கருணாகரன்,பேரூராட்சி துணைத் தலைவர் சரோஜா,கவுன்சிலர்கள் செல்வராஜ், பிரேம் ஆனந்த்,ஆதிலிங்கபெருமாள், குறமகள்,கவிஞர் சீதாராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.