தருமபுரி, செப்டம்பர் 11 –
தருமபுரி மாவட்டம் சோகத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் என்.கே. திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் மகளிர் உரிமைத் தொகை, பட்டா சிட்டா பெயர் மாற்றம், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா ஆகியவை வேண்டி பொதுமக்கள் துறை சார்ந்த அலுவலர்களிடம் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து வழங்கினார்கள்.
மருத்துவ முகாமில் பிபி, சர்க்கரை நோய் ஆகியவை பொதுமக்கள் பரிசோதனை செய்து கொண்டனர். இந்த முகாமில் தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக நல திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார். இதில் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன், வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, ஒன்றிய செயலாளர் காவேரி, துணைச் செயலாளர் சதீஷ்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



