சென்னை, செப்டம்பர், 10,
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற நோக்கில் மாநாடு நடைபெறுவதையொட்டி தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் ஷேக் தாவூத் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் கோவை சாகுல் ஹமீது ஆகியோர் தலைமையில்
மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் , ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தி வணங்கினர்.
அப்போது செய்தியாளர்களிடம் தலைவர் ஷேக் தாவூத் தெரிவித்ததாவது:-
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கோட்பாட்டின் படி தமிழக மக்களின் அன்பை பெற்று ஆட்சி செய்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆசியோடு மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம். சாதி, மத பேதமின்றி அனைவரும் பங்குபெறும் வகையில் நடக்கும் இம்மாநாட்டிற்கு 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் மாநில அமைப்பு செயலாளர் எஸ். ஏ .முகமது மஸ்தான், ஜாகிர் உசேன், ஆர்.மனோஜ், எஸ். தாவுத் கான்,தனகோபி ,பிரகாஷ் கவியரசு, சுப்பிரமணி ஆகியோர் உடனிருந்தனர்.