கிருஷ்ணகிரி,ஆக.9 – கிருஷ்ணகிரி மைய மாவட்ட செயலாளர் அ.மாதேஷ் தலைமையில், கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி தாலுக்கா பேரிகை காவல் நிலையத்திற்கு உட்பட்ட முதுகுறுக்கி கிராமத்தில் சுமார் 35 ஆண்டு காலமாக அரசாங்கம் ஆதிதிராவிடர்களுக்கு கொடுத்த நிலத்தை கொடுத்தவரே கையகபடுத்தி வைத்துக் கொண்டுள்ளார். அந்த நிலத்தை ஆதி திராவிடர்களுக்கு ஒதுக்கி கொடுக்க வேண்டும் என நிலம் மீட்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கிருஷ்ணகிரி மைய மாவட்ட செயலாளர் பேசும் போது, முதுகுறுக்கி கிராமத்து ஆதிதிராவிடர் மக்களுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் நிலம் கையகப்படுத்திய நிலத்தை அரசுக்கு வழங்காமல் நிலத்தின் உரிமையாளரே அனுபவித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் அரசு அறிவித்த ஆதிதிராவிடற்கான நிலம் கிடைக்காமல் இருந்து வரும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையில் பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, இதனை கண்டிக்கின்ற வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் ஒப்புதல்லோடு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நிலம் மீட்பு போராட்டம் நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டு வழக்கு தீர்ப்புரை வந்த பிறகும் அந்த நிலம் உரிமையாளர் மறுசீரமைப்பு மனு போடப்பட்டு இருக்கிறார். ஆனால் தீர்ப்புக்கு எந்த விதமான தடையும் நீதிமன்றத்தின் மூலம் இல்லை. ஆகையால் அரசு அதிகாரிகள் எங்களோடு பேச்சு வார்த்தை நடத்தி மீண்டும் 15 ஆம் தேதி வழக்கு வாய்தா வருவதால், அன்றைக்கு வந்து நாங்கள் டிஸ்மிஸ் பண்ணிட்டு நிலத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நபரிடமிருந்து மீட்டு அரசு கையகப்படுத்தி, அந்த இடத்தில் அரசுக்கு சொந்தமான இடம் என தகவல் பலகை வைப்பதாக கூறி உறுதி அளித்ததை அடுத்து, இந்த போராட்டத்தை முடித்துக் கொள்வதாகவும் தெரிவித்து பேசினார். மேலும் இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மிகப்பெரிய அளவில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதாகவும் கூறினார். நிகழ்ச்சியில்
இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் ஜெய்சங்கர், அரசு ஊழியர் ஐக்கிய பேரவை மாவட்ட அமைப்பாளர் அம்பேத்கர் நாதன், தொகுதி துணை செயலாளர் வேப்பனப்பள்ளி கார்த்தி, துணை செயலாளர் கிருஷ்ணகிரி முரளி, ஒன்றிய செயலாளர் வேப்பனப்பள்ளி கிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகிரி ஆலப்பட்டி ரமேஷ், ஒன்றிய பொறுப்பாளர் சிவப்பிரகாஷ், ஒன்றிய துணை செயலாளர் சூளகிரி ஆட்டோமுரளி, நகரச் செயலாளர் கிருஷ்ணகிரி கணபதி, நகர பொறுப்பாளர் கிருஷ்ணகிரி காதர், மகளிர் அணி மாவட்ட செயலாளர் முருகம்மாள், ஆகியோர் முன்னிலையில் மாபெரும் நிலம் மீட்பு போராட்டம் நடைபெற்றது. மகளிர் அணி ஒன்றிய செயலாளர் சூளகிரி சரஸ்வதி, ராமன், மகளிர் அணி துணை செயலாளர் தேவி, மகளிர் அணி ஒன்றிய செயலாளர் கௌரம்மா, மகளிர் அணி ஒன்றிய செயலாளர் காயத்ரி, சுமித்ரா, மத்தூர் ஒன்றிய செயலாளர் மூர்த்தி, மாவட்ட இலக்கிய பேரவை அமைப்பாளர் சிறுத்தை சந்திரன், ஆர்மி கோபி, சின்னா, சிலம்பரசன், கார்த்திகேயன், கெலமங்கலம் ராஜப்பா, அருணகிரி, நவீன்குமார், மற்றும் முதுகுறிச்சி புட்டப்பா, மஞ்சு, பேரிகை புட்ராஜ், மருதாண்ட பள்ளி நவீன், ஏ.செட்டிபள்ளி மஞ்சு, நாகேஷ், உள்ளிட்ட ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கலந்து கொண்டனர். இறுதியாக ஒன்றிய பொறுப்பாளர் சிவபிரகாஷ் நன்றி உரையாற்றினார்.