கிருஷ்ணகிரி,ஜுன்.18-
தமிழ்நாடு அளவிலான நேரடி நியமன பள்ளி ஆய்வாக உதவியாளர்கள் சங்கம் மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் ஆசிரியர் இல்லத்தில் மாநிலத் தலைவர் அர்ஜுன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ஆசிரியர் மனசு திட்ட இயக்குனர் சிகரம் சதீஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். இதைத்தொடர்ந்து மாநில பொறுப்பாளர்கள் நியமிக்க மாநில தேர்தல் நடத்தும் அலுவலர்கள். பூபதி,ந.குருபிரசாத் ஆகியோர் முன்னிலையில் ஒரு மனதாக போற்றின்றி தேர்தல் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் தஞ்சாவூர் ம.அர்ஜுன், மாநில செயலாளராக திருவள்ளுர் பா.ஞானவேல், மாநில பொருளாளராக ஈரோடு து. ரகு, மாநில ஒருங்கிணைப்பாளர் சேலம் செ.ராஜகணபதி, மாநில மகளிர் அணி தலைவர் கிருஷ்ணகிரி க.கௌதமி மற்றும் துணைத் தலைவர், துணைச் செயலாளர், துணை பொருளாளர் மற்றும் பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் கோட்டிஸ்வரன், மதிவாணன், கிருஷ்ணகிரி கங்காதரன், மோகனபிரியா, சுலோக்சனா, மீனாட்சி, விவேகானந்தன்,மாநில துணைத்தலைவர்கள், மாநில இணைச் செயலாளர்கள் உள்பட ராதிகா, ஆஷா, ரம்யா, தேவிகா உள்பட அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.