கரூர் மாவட்டம் – ஜூன் – 10
கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், மாவத்தூர் கிராமம், பசுபதி பாளையத்தில் ஸ்ரீ ஏழுமலையான், ஸ்ரீ பாம்பாலம்மன் ஆகிய தெய்வங்களுக்கு கோவில் அமைந்துள்ளது..
இக்கோயிலில் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததையடுத்து கும்பாபிஷேக விழாயொட்டி நேற்று 09 ம் தேதி மாயனூர் மதுக்கரை செல்லாண்டியம்மன் கோவிலில் காவிரி ஆற்றில் இருந்து, புனித நீர் கொண்டு வரப்பட்டது.
புனித நீர் அடங்கிய கும்பத்தை சிவாச்சாரியார்கள் யாக வேள்வியில் வைத்து மகா கணபதி பூஜை, விக்னேஷ்வர பூஜை செய்தனர். நேற்று காலை சிவாச்சாரியார்கள், கும்பத்தை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர். வானில் கருட பகவான் வட்டமிட்டதை அடுத்து 9.00 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் புனித நீரை கலசத்திற்கு ஊற்றி, கும்பாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜை செய்யப்பட்ட பின், பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் ஸ்ரீ ஏழுமலையான், ஸ்ரீ பாம்பாலம்மன் சுவாமி மூலவர் சிலைகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. பசுபதிபாளையம் சேர்ந்த திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். விழாக்குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது..