காரியாபட்டி – ஏப் 20.
விருதுநகர் மாவட்டம், கல்குறிச்சி நியூ லைப் பவுண்டேசன் சார்பில் ருத்ரா திட்டத்தின் சார்பில் நரிக்குடி அருகே கல்வி மடையில் சிறுநீரக நோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், 200 க்கு மேற்பட்ட நபர்களுக்கு டாக்டர்.காமாட்சி சங்கர் தலைமையில் மருத்துவ குழுவினர். பரிசோதனை செய்தனர்.
மேலும் சிறுநீரக பாதிப்புள்ள நபர்களுக்கு நோய் தடுப்பு குறித்த மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த முகாம் ஏற்பாடுகளை, லைப் பவுண்டேசன் நிர்வாகிகள் மற்றும் கிராம இளைஞர்கள் சிறப்பாக
செய்திருந்தனர்.