மதுரை ஜனவரி10,
மதுரை பெரியார் பேருந்து நிலையம் முதல் ரயில்வே நிலைய சந்திப்பு வரை
சாலை பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு மதுரை மாநகர் காவல் துறையினருடன் இணைந்து சேர்மத்தாய் வாசன் கல்லூரி NSS மாணவிகள் 200 பேர், போக்குவரத்து விழிப்புணர்வு பதாகைகளுடன் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் மதுரை மாநகர் போக்குவரத்து காவல் உதவி ஆணையர்கள் இளமாறன், செல்வின், காவல் ஆய்வாளர்கள் தங்கமணி, அழகர், பூர்ண கிருஷ்ணன் மற்றும் பள்ளி கல்லூரி முதல்வர் கவிதா ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்