இரணியல், ஜூன் – 1
இரணியல் அருகே கண்டன் விளையை சேர்ந்தவர் ஜான்ராஜ் மகன் பிரதீப் (28). தக்கலையில் ஒரு நகைக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பிரதீப் கடந்த சில நாட்களாகவே மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு சென்று திரும்பி பிரதீப் இரவு படுக்கை அறையில் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் மின்விசிறியில் சேலையில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை உறவினர்கள் பார்த்த போது, பிரதீப் இறந்துள்ளார்.
இது குறித்து இரணியல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இரணியல் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தி, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக மேலும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.