நாகர்கோவில் – செப்- 24,
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காவல்நிலைய எல்கைக்கு உட்பட்ட அனந்தபத்மநாபபுரம் பகுதியை சேர்ந்த ரவிசந்திரன் சொந்தமாக ஜெசிபி இயந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார். இந்த ஜெசிபி இயந்திரத்தை நெல்லை மாவட்டத்தை சேர்ந்த யோகேஷ் என்ற இளைஞர் இயக்கி வந்துள்ளர். நேற்று செண்பகராமன் புதூர் பொய்கை அணை அருகே உள்ள கால்வாய் கரையில் வரும் போது ஜெசிபி இயந்திரத்தின் முன் சக்கரம் கழன்று கால்வாயினுள் ஜெசிபி இயந்திரம் கவிழ்ந்து விழுந்தது . இதில் ஒட்டுனர் யோகேஷின் கால் நரம்புகள் துண்டாகிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்ததை அப்பகுதி பொதுமக்கள் ஆரல்வாய்மொழி காவல் துறையினருக்கு தகவல் அளித்ததின் பெயரில் ஆரல்வாய் மொழி காவல் நிலைய ஆய்வாளர் அன்பு பிரகாஷ் உத்தரவின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிய ஜேசிபி ஒட்டுனரை மீட்டு முதலுதவி அளித்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து சம்பவம் குறித்து சுமார் இரண்டு மணி நேரமாக அப்பகுதியில் போலீசார் விசாரணை நடத்தியது வரை ஜெசிபி வாகனம் தீ பற்றி எறிய வில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் சுமார் இரண்டு மணி நேரத்திற்க்கு பிறகு தீ பிடித்து எரிந்த சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.