கன்னியாகுமரி டிச 6
குமரி மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கன்னியாகுமரி மகளிர் காவல் நிலையம் அருகிலுள்ள அதிமுக தொழிற்சங்க ஆட்டோ நிறுத்தத்தில் வைத்து ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவு நாள் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் வைகுண்ட மணி, மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சிவ செல்வராஜன், மாநில இலக்கிய அணி இணைச் செயலாளர் சந்துரு என்ற ஜெயச்சந்திரன், மாவட்டத் துணைச் செயலாளர் சுகுமாரன், ஒன்றிய செயலாளர் தினேஷ்,பேரூர் செயலாளர் எழிலன், முன்னாள் ஒன்றிய செயலாளர் தம்பி தங்கம் மற்றும் நிலைய நிர்வாகிகள் பிரசாந்த், குமார், மகேஷ், சகாய ரூபன் மற்றும் உறுப்பினர்கள் சிவபெருமாள், ஜான் பிலோரியா ஜோசப், வினோத், செந்தூர் பாண்டியன், கல்யாணி, முத்து, ஆண்டின் ஜார்ஜ், சிம்சன் ஜான் ரவீந்திரன், சதாசிவம், அலங்கா அலெக்ஸ்,சுதன், ஆண்டனி விக்னேஷ், வேலவன், துறை, முத்துசாமி, சகாய லியோ, மகாராஜன் கழக முன்னோடிகள் அமலதாஸ், பாபு, அலெக்ஸாண்டர், பகவதி அப்பன், ஜேம்ஸ், கிருஷ்ணகுமார் உட்பட கழக முன்னணியினர் பலர் கலந்து கொண்டனர்.