தருமபுரி மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி நடைபெற்றது. அரூர் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று ஆய்வு மேற்கொண்டார். இதில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம் முதல் பட்டதாரி சான்றிதழ், விவசாய நிலத்திற்கு மின்சார இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனுக்களை அளித்தனர் அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் மனுக்களுக்கு விரைவாக தீர்வு காண உத்தரவிட்டார். இந்த ஜமாபந்தியில் மொத்தம் 411 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. பல்வேறு கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக தீர்வு கிடைத்ததால் மனுதாரர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து ஆட்சியர் சதீஷ் வருவாய் ஆவணங்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் பராமரித்து வரும் கணக்கு பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தருமபுரி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி யில் தாசில்தார் சண்முகம் முன்னிலையில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி 314 மனுக்கள் கொடுத்தனர் .இதில் ஐந்து பேருக்கு உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்திக்கு அரூர் உதவி கலெக்டர் சின்னசாமி தலைமையில் பொதுமக்களிடம் இருந்து 264 மனுக்கள் பெறப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி நடைபெற்றது

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics