கிருஷ்ணகிரி. ஜூன்.18-கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் சிங்காரப்பேட்டை உள்வட்டத்திற்குட்பட்ட, அத்திப்பாடி, மகனூர்ப்பட்டி மற்றும் கீழ்மத்தூர் ஆகிய 3 தொகுதிகளில் உள்ள 8 கிராமங்களுக்கும், சாமல்பட்டி உள்வட்டத்திற்குட்பட்ட குன்னத்தூர், கே.எட்டிப்பட்டி, சாமல்பட்டி, ராமகிருஷ்ணம்பதி, கே.பாப்பாரப்பட்டி ஆகிய 5 தொகுதிகளில் உள்ள 24 கிராமங்களுக்கான 1433 ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு , அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி14.06.2024 அன்று துவங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாள் நிகழ்ச்சியில் சிங்காரப்பேட்டை உள்வட்டத்திற்குட்பட்ட 34 வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
18.06.2024 இரண்டாவது நாள் நிகழ்ச்சியில், சிங்காரப்பேட்டை உள்வட்டத்திற்குட்பட்ட, அத்திப்பாடி, மகனூர்ப்பட்டி மற்றும் கீழ்மத்தூர் ஆகிய 3 தொகுதிகளில் உள்ள அத்திப்பாடி, எலவம்பாடி, பள்ளத்தூர், புங்கனி, மகனூர்ப்பட்டி, முசிலிக்குட்டை, குருபரவலசை, கீழ்மத்தூர் ஆகிய 8 கிராமங்களுக்கும்,
சாமல்பட்டி உள்வட்டத்திற்குட்பட்ட குன்னத்தூர், கே.எட்டிப்பட்டி, சாமல்பட்டி, ராமகிருஷ்ணம்பதி, கே.பாப்பாரப்பட்டி ஆகிய 5 தொகுதிகளில் உள்ள குன்னத்தூர், வடுகனூர், கே.எட்டிப்பட்டி, குமாரம்பட்டி, கூனம்பட்டி, மூக்கரம்பள்ளி, நாரலப்பள்ளி, பரசனூர், சாவடியூர், படதாசம்பட்டி, குள்ளகாணப்பள்ளி, ஒட்டப்பட்டி, கூர்சம்பட்டி, சாமல்பட்டி, நாகல்பட்டி, பசந்தி, மோட்டூர், கங்கானூர், கணிச்சி, ராமகிருஷ்ணம்பதி, காமாட்சிப்பட்டி, கோட்டப்பதி, கே.பாப்பாரப்பட்டி, குள்ளம்பதி ஆகிய 24 கிராமங்கள் என மொத்தம் 32 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து, பட்டா பெயர் மாற்றம், உட்பிரிவு பட்டா, நில ஆக்கிரமிப்பு அகற்றம், நில அளவை உள்ளிட்ட 106 மனுக்கள்
வரப்பெற்றது.
மேலும், கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கள் கிராமப் பகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் பட்டா மாறுதல், பிறப்பு மற்றும் இறப்பு உள்ளிட்ட சான்றிதழ்கள் கோரி விண்ணப்பித்த மனுக்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும். பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியான மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவிட்டார்.தொடர்ந்து, மேற்குறிப்பிட்ட 32 கிராமங்களை சேர்ந்த பதிவேடுகளான அ – பதிவேடு, எப்.எம்.பி. பதிவேடு, அடங்கல், 1 – கிராம கணக்கு 可 – உள்ளடக்கம், பட்டா மற்றும் புறம்போக்கு பதிவேடு, தனிபட்டா, சிட்டா மற்றும் அடங்கல், பண வரவு பதிவேடு உள்ளிட்ட பதிவேடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு , அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மூன்றாவது நாள் 19.06.2024 புதன் கிழமை அன்று சாமல்பட்டி உள்வட்டத்திற்குட்பட்ட கருமாண்டபதி, கெங்கபிராம்பட்டி, கெரிகேப்பள்ளி கதவணி, ஆகிய காரப்பட்டு, உப்பாரப்பட்டி, 6 தொகுதிகளுக்குட்பட்ட 24 கிராமங்களுக்கும், ஊத்தங்கரை உள்வட்டத்திற்குட்பட்ட மூங்கிலேரி, புதூர் புங்கனை, கீழ்க்குப்பம் ஆகிய 3 தொகுதிகளுக்குட்பட்ட 15 கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி நடைபெற உள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்களது கோரிக்கை மனுக்களை ஜமாபந்தி அலுவலர்களிடம் வழங்கலாம். தகுதியான மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு உடனடி தீர்வு காணப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு , அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது .பி.புஷ்பா, வட்டாட்சியர் .திருமால் மற்றும் துணை வட்டாட்சியர்கள் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.