நீலகிரி. மார் .06
மலைபாதை மற்றும் கோத்தகிரி சாலையில் பூத்து குலுங்கும் ஜெகரண்டா மலர்கள்
நீலகிரி மாவட்டம் குன்னுாரில் ‘ஜெகரண்டா’ மலர்கள் சுற்றுலா பயணிகளை வரவேற்கிறது. கடந்த, 18ம் நுாற்றாண்டில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், நீலகிரிக்கு வந்த ஆங்கிலேயர்கள் வெளிநாட்டு மரங்களான, ‘ஜெகரண்டா, பிளேம் ஆப் பாரஸ்ட், யூகலிப்டஸ்’ உள்ளிட்ட ஏராளமான வகை மரங்களை இங்கு நடவு செய்தனர். இந்த வரிசையில் வளர்க்கப்பட்ட ‘ஜெகரண்டா’ மரங்களில், நீல நிற மலர்கள் கோடையில் மலர்வது வழக்கம். தற்போது, குன்னுார் மேட்டுப்பாளையம் மலைபாதை மற்றும் கோத்தகிரி ,குன்னூர் சாலையை இந்தப்பூக்கள் அலங்கரிக்கிறது, சாலையின் இரு புறமும் ஜெகரண்டா மலர்கள் பூத்து குலுங்குகிறது மலை பகுதியில் இந்த மரங்களில், மலர்ந்துள்ள ஜெகரண்டா மலர்களை சுற்றுலா பயணிகள் வெகுவாக ரசித்து செல்கின்றனர். தேயிலை தோட்டங்களுக்கு நடுவே இந்த பூக்கள் பூத்து குலுங்குகிறது. , சுற்றுலா பயணிகள்
ஜெகரண்டா மலர்களுக்கு இடையே ‘புகை’ப்படம்எடுத்து செல்கின்றனர்.