தேனி செப் 18:
தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 210 மனுக்கள் பெறப்பட்டது தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 210 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை புதிய வீட்டுமனை பட்டா வேலைவாய்ப்பு வேண்டி இதர மனுக்கள் 210 மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் வழங்கினார்கள் மேலும் இந்த கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் சமூக நலன் துறை மகளிர் உரிமைத்துறை பெண் குழந்தைகளுக்கான அறிவியல் கண்காட்சியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் 10000 வீதம் தலா இரண்டு மாணவிகளுக்கும் இரண்டாம் பரிசாக தலா 5000 வீதம் தலா இரண்டு மாணவிகளுக்கும் மூன்றாம் பரிசாக தலா 3000 வீதம் இரண்டு மாணவிகளுக்கும் மற்றும் ஒன்றிய அளவில் ஊரக பகுதிகளில் நடைபெற்ற 30 மாணவிகளுக்கு தலா 2500 வீதம் 75 ஆயிரம் என மொத்தம் ரூபாய் ஒரு லட்சத்து 11 ஆயிரம் ரொக்க பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார் இதனைத் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் 5638 மதிப்பில்லான தையல் மிஷின் 15 பயனாளிகளுக்கும் 4871 மதிப்பிலான தேய்ப்பு பெட்டி 3 பயனாளிகளுக்கும் என மொத்தம் 99183 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன சமூக நீதி நாள் உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர் வாசிக்க அனைத்து த்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர் இந்த கூட்டத்தில் தனித்துணி ஆட்சியர் முரளி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வசந்தா பொறுப்பு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் வெங்கடாசலம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் காமாட்சி மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளா தேவி மற்றும் அரசு அலுவலர்கள் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் இரா நல்லதம்பி வெகு சிறப்பாக செய்திருந்தார்