கீழக்கரை ஜூன் 23-
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு சில ஒரு சிலர் கடந்த காலங்களில் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளனர் அவர்களை கள்ளச்சாராயம் விற்பனை செய்யக்கூடாது என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது அவர்கள் வாழ்வாதாரத்திற்கு அரசு மாற்று தொழில் செய்வதற்கு மானியம் வழங்கி உள்ளது தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டவர்கள் இறந்து விட்டதால் தமிழகத்தில் அந்தந்த மாவட்டங்களில் கள்ளச்சாராயம் யாரேனும் விற்பனை செய்யப்படுகிறதா என்று வருவாய்த் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர் ஏர்வாடி சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறதா என்று மாவட்ட கோட்ட ஆய அலுவலர் முருகேசன் தலைமையில் நேரில் ஆய்வு செய்தார் கடந்த காலங்களில் கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்கள் மாற்றுத் தொழிலாக டீக்கடை இட்லி கடை தினசரி கூலி வேலையாக செய்து வருகின்றனர் இவர்கள் யாரும் கள்ளச்சாராயம் இங்கு விற்பனை செய்யவில்லை என்று கூறினார் கீழக்கரை வட்டாட்சியர் பழனிக்குமார் மண்டல துணை தாசில்தார் பரமசிவம் கீழக்கரை வருவாய் ஆய்வாளர் வேல்முருகன் ஏர்வாடி கிராம நிர்வாக அலுவலர் மாரியப்பன் மற்றும் கிராம உதவியாளர் உடன் உடன் இருந்தனர்.