பூதப்பாண்டி – நவ – 8 –
குமரி மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்துள்ள இறச்ச குளம் ஊராட்சியில் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற அனைத்து சுய உதவி குழுவினுடைய செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் அழகு மீனா ஆய்வு செய்தார் ஆய்வுக்குபின்னர் குழு செயல்பாடுகள் நன்றாக உள்ளது என்று பாராட்டினார். உடன் இறச்ச குளம் ஊராட்சி மன்ற தலைவர் நீலகண்ட ஜெகதீஷ் மற்றும் குழு பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.