ஈரோடு டிச 27
ஈரோடு திண்டலில் உள்ள வேளாளர் கல்லூரி கஸ்தூரிபா தமிழியக்க காந்தி கலையரங்கத்தில் அறிமுக விழா நடைபெற்றது. வேளாளர் மகளிர் கல்லூரி செயலர் சந்திரசேகர் அவர்கள் ம வகித்தார். முதல்வர் முனைவர் ஜெயந்தி வரவேற்றார். தமிழ் இயக்கத்தின் பொதுச் செயலாளர் கவியருவி அப்துல் காதர் அறிமுகவுரை ஆற்றினார்.
விஐடி பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் வேந்தரும் தமிழியகத்தின் நிறுவனருமான விசுவநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். வேளாளர் மகளிர் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலையில் பயின்று முதலிடம் பெறும் மாணவிகளுக்கு, விஐடி பல்கலைக்கழகம் சார்பாக தங்கப்பதக்கம் அளிப்பதாக அப்போது அவர் உறுதியளித்தார்.
தமிழியக்கத்தின் மாநிலச் செயலாளர் சிவகுமார் அமைப்பு செயலாளர் வணங்காமுடி துணை அமைப்பு செயலாளர் சிதம்பர பாரதி கோவை மண்டலச் செயலாளர் மருத்துவர் அனுப் மற்றும் ஈரோடு மாவட்ட பொறுப்பாளர்களும் இணைச் செயலாளர் முனைவர் ஜோதிமணி பொருளாளர் முனைவர் செந்தாமரை விழாவில் கலந்து கொண்டனர்.
வேளாளர் மகளிர் கல்லூரியில் பயிலும் 1000 மாணவிகளும் செங்குந்தர் பள்ளியில் பயிலும் 1000 மாணவ, மாணவிகளும் தமிழியக்கத்தில் உறுப்பினர்களாக இணைந்தார்கள். தமிழியக்கத்தின் 60 உள்ளாட்சி பொறுப்பாளர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்டச் செயலாளர் பவள சங்கரி திருநாவுக்கரசு நன்றி கூறினார் .