மதுரை மாவட்டம் சிலைமான் புளியங்குளம் எலைட் (சிபிஎஸ்சி) பள்ளியில் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா யோகா நிகழ்ச்சியை பள்ளியின் தாளாளர் S.காஜாமைதீன் மற்றும் பள்ளியின் முதல்வர் K.நஜீமா ஆகியோர் துவக்கி வைத்தனர். மாணவ மாணவிகள் அனைவரும் ஆர்வமுடன் யோகாசனம் செய்தனர். இந்நிகழ்வின் போது பள்ளி ஆசிரியர் பெருமக்கள் உடனிருந்தனர்.