தென்தாமரைகுளம்., டிச. 13.குமரிமாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் அகிலத்திரட்டு உதயதின விழா நேற்று நடைபெற்றது.
அய்யா வைகுண்ட சுவாமியின் ஆகமநூலான அகிலத்திரட்டு அம்மானை அய்யா வைகுண்ட சுவாமியால் கொல்லம் ஆண்டு 1016 கார்த்திகை மாதம் 27ம் தேதி அகிலத்திற்கு அருளப்பட்டது. அதை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் அன்புவனத்தில் அகிலத்திரட்டு உதயதின விழா நடைபெற்று வருகிறது.இந்த ஆண்டுக்கான விழா பால பிரஜாபதி அடிகளார் தலைமையில் நடைபெற்றது.இதையொட்டி நேற்று காலை அய்யாவுக்கு சிறப்பு பணிவிடைகளும் உகப்படிப்பும் நடைபெற்றது. தொடர்ந்து அகிலத்திரட்டு அம்மானை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் தெருவீதி வலம் கொண்டு வரப்பட்டது.தொடர்ந்து தர்மங்களும்,சிறப்பு நிகழ்வுகளும் நடைபெற்றன.நிகழ்ச்சியில் வளவன்,தர்மரஜினி,சேனாப்பள்ளி கோபால கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ராஜன்,ஆதிநாராயணன்,பொன்னுகிருஷ்ணன் ஆகியோர் திரு ஏடு வாசித்தனர். விழாவில் பலர் கலந்து கொண்டார்.