மதுரை டிசம்பர் 31,
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் சமுக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக “புதுமைப் பெண்” திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்கள் அதனை தொடர்ந்து மதுரை மாவட்டம் லேடி டோக் பெருமாட்டி கல்லூரி கூட்டரங்கில் விரிவுபடுத்தப்பட்ட “புதுமைப்பெண்” திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை பெறுவதற்கான வங்கி பற்று அட்டைகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார். உடன் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன், துணை மேயர் நாகராஜன், மாநகராட்சி மண்டலத்தலைவர் சரவணா புவனேஸ்வரி ஆகியோர் உடன் உள்ளனர்.