பரமக்குடி,அக்.3: பரமக்குடியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு இந்திய ஒற்றுமை பயணம் நடைபெற்றது.
இந்திய தேசத்தில் ஒற்றுமையையும் அன்பையும் வளர்ப்போம் என்ற நோக்கில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில்,மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் சரவண காந்தி தலைமை வகித்தார்.மாவட்ட பொறுப்பா குழு உறுப்பினர்கள்
பாரிராஜன்,செந்தாமரைகண்ணன்,தெய்வேந்திரன்
முன்னிலை வகித்தனர். மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து இந்திய ஒற்றுமை பயணம் காந்தி சிலையிலிருந்து ஆற்று பாலம் வழியாக ஓட்டப் பாலம் காந்தி சத்திய சோதனை வரை நடை பயணம் நடைபெற்றது. இந்த ஒற்றுமை பயணத்தில் ஆலம், முத்துகிருஷ்ணன், ஆதி, பாலகிருஷ்ணன்,ராமலெட்சுமி,அன்புச்செழியன்,ராஜா,கோதண்டராமன், மில்கா செந்தில், புவனேஸ்வரன்,பாம்பூர் வேலுச்சாமி
மற்றும் 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பரமக்குடியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக காந்தி ஜெயந்தி முன்னிட்டு இந்திய நடைபெற்றது.