மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் எதிரே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.நீர்மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சிக்கு கட்சியின் தமிழக பொருளாளர் அபு பாரீஸ் தலைமை வசித்தார். நீர்மோர் பந்தலை மயிலாடுதுறை நகரமன்ற தலைவர் குண்டாமணி (எ) செல்வராஜ் துவக்கி வைத்தார். அப்போது பொதுமக்களுக்கு தர்பூசனி நீர்மோர் ஆகியவை வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வக்பு வாரிய சட்டத்துக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டது. நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர், அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



