திண்டுக்கல் ஜுன் :17
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை ஒன்றியத்திற்கு உட்பட்ட கொம்பேறிபட்டியில் ஏபிஜே அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை சார்பாக சேவை மைய திறப்பு விழா மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.கொம்பேறிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் எ.ராஜரத்தினம் தலைமை தாங்கினார்.அறக்கட்டளை நிறுவனர்
சமூகசேவகர் எஎம்பி.டாக்டர்.பி.மருதைகலாம் முன்னிலை வகித்தார். அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் முத்துக் கார்த்தி வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக கணவாய்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரிட்டோ லீனஸ்ராஜ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பிளாஸ்டிக் பை ஒழிப்பு , கல்வி முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு வழங்கி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு ,பேனா, பென்சில் ஸ்கேல், ரப்பர் ,சார்பனர் வழங்கி தொடங்கி வைத்தார். இவ்விழாவில் வார்டு உறுப்பினர் காளீஸ்வரிநாகராஜன் , மக்கள் நலப்பணியாளர் முருகாம்பல் , மேல்நிலைத் தொட்டி ஆப்ரேட்டர் காளியப்பன்,பெற்றோர்கள், கலந்து கொண்டனர்.சேவை மைய நிர்வாகிகள் கிஷோர், லோகேஷ்,பிரேம் , கிருஷ்ணவேணி, எழில் பாரதி, பூஜா ஆகியோர்கள் ஏற்பாடு செய்தனர்.