தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாலவாடி ஊராட்சி, கானா ப்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் காமராஜர் முழு உருவ வெண்கல சிலை திறப்பு விழா நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பாலவாடி ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் மற்றும் ஊர் பெரியவர்கள் முன்னிலை வகித்தனர். சிறுமி ரேகாஸ்ரி காமராஜர் சிலையை திறந்து வைத்தார். பின்னர் ஊர் பெரியவர்கள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தும் ,மலர் தூவியும் மரியாதை செய்தனர். நிகழ்ச்சியில் பள்ளியின் மாணவ, மாணவிகளின் பேச்சுப்போட்டி, திருக்குறள் ஒப்பித்தல் போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆறுமுகம்,ஊர் கவுண்டர் மணிவாசகம்,மந்திரி கவுண்டர் சரவணன், முன்னாள் எம்பியும், தருமபுரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் தீர்த்த ராமன், டாக்டர் சக்திவேல், குமார், மாதையன், பெரியசாமி, சின்னசாமி, ரங்கநாதன், காளியப்பன், தனபால், பெருமாள் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு காமராஜர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.
காமராஜர் முழு உருவ வெண்கல சிலை திறப்பு விழா

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics