சென்னை, ஜன- 24,
வளைகுடா நவநாகரிக நகரமான துபாயை தளமாக கொண்ட லேண்ட்மார்க் குழுமத்தின் பேபி ஷாப் என்னும் குழந்தைகளுக்கான சிறப்பு ஷோரூம் திறப்பு விழா சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் நடை பெற்றது.
பிரபல இந்திய நடிகை சோஹா அலிகான் இத்திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது
‘பேபிஷாப்பின் தலைமை நிர்வாக அதிகாரி ரூபன் சண்முகராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
குழந்தைகளின்
அத்தியாவசியப் பொருட்களில் நம்பகமான நிறுவனமான பேபிஷாப், சென்னையின் எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் அதன் முதன்மைக் கடையைத் தொடங்குவதன் மூலம் இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளது.
50 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் வாய்ந்த பேபி ஷாப் ஷோரூம்கள் 14 நாடுகளில் 250க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டுள்ளது.
உலகளவில் 10 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சேவை செய்கிறது. இச்சேவையை இந்தியாவில்
தொடங்கியிருப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.
இதன் மூலம் இந்திய பெற்றோருக்கு நம்பிக்கை, தரம் மற்றும் பாரம்பரியத்தைக் கொண்டுவருகிறது.
உலகளவில் 10 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சேவையில் ஈடுபட்டு கொண்டிருக்கும்
பேபிஷாப் கடைகள் பெற்றோருக்கான ஒரே இடமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. புதிதாகப் பிறந்த குழந்தைகள் முதல் 10 வயது வரையிலான குழந்தைகளுக்கு துணை உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள்
உலகமயமாக்கல் வாயிலாக இந்திய கலாச்சார நுகர்பொருட்களுடன் இணைந்து அனைத்து விதமான தயாரிப்புகளுடன் சென்னை மாநகர சந்தைக்குள் நுழைகிறது.
மேலும் சென்னையில் மட்டுமல்லாது தமிழ்நாட்டில் பெருநகரங்களில் தொடங்கவும் திட்டமிட்டு இருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார் .