சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அல்லிநகரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ தண்டீஸ்வர அய்யனார் திருக்கோயிலில் ஆனி மாதம் வளர்பிறை பிரதோஷம் வழிபாடு பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக மூலவர் தண்டீஸ்வரர் அய்யனார்ருக்கும் அதனைத் தொடர்ந்து ஆதிமூல லிங்கத்திற்க்கும் நந்தியப் பெருமானுக்கும் குரு பகவான் தட்சிணா மூர்த்திக்கும் வளர்பிறை பிரதோஷ வழிபாடு பூஜைகள் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் பக்தர்கள் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதனைக் காண அல்லிநகரம் கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து பக்தர்கள் பெரும் அளவில் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தனர் வருகை புரிந்த பக்தர்களுக்கு அய்யன் அருள் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.