இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று சிறிய அளவிலான ஜவுளி பூங்கா ( Mini Textiles park ) அமைப்பது தொடர்பாக, ஜவுளி தொழில் முனைவோர்களுடனான விழிப்புணர்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆலோசனை மேற்கொண்டதுடன், இராமநாதபுரம் மாவட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கிடும் பொருட்டும், ஜவுளி தொழிலை மேம்படுத்தும் பொருட்டும், இராமநாதபுரம் மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க தொழில் முனைவோர்கள் முன்வர வேண்டுமென வேண்டுகோள்விடுத்தார்



