By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கூடலூர் தொகுதி சட்டப்பிரிவு -17 நிலத்தில்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கூடலூர் தொகுதி சட்டப்பிரிவு -17 நிலத்தில்
மாவட்டம்

கூடலூர் தொகுதி சட்டப்பிரிவு -17 நிலத்தில்

Last updated: November 20, 2024 11:12 am
November 20, 2024 52 Views
Share
SHARE

[11:32 am, 19/11/2024] +91 96777 06646: நீலகிரி. நவ. 20.

 நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதியில் சட்டப்பிரிவு 17ன்   கீழ் வரையறுக்கப்பட்ட நிலத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் விவசாயிகள் வசிக்கின்றனர். தனியார் வன பாதுகாப்பு சட்டத்தில் உள்ளடக்கப்பட்ட இந்த நிலத்தில் வசிப்போருக்கு பட்டா வழங்கவும் வீடு கட்ட தளவாடப் பொருட்களை எடுத்து செல்லவும் தடையும்,  மின் வசதி வழங்க தடையும் நீண்ட காலமாக உள்ளது. சட்டப்பிரிவுக்கு உட்பட்ட நிலத்தில் 4.939 ஏக்கரில் 10,052 குடும்பங்கள் வசிக்கின்றனர். இதில் 6,558 பேர் ஒரு ஏக்கருக்கும் குறைவாக கைவச நிலம்  வைத்து தேயிலை,  மிளகு, கிராம்பு, ஏலக்காய்,  இஞ்சி,  மஞ்சள், காப்பி போன்ற பயிர்களை விளைவித்து வருகின்றனர்.  சட்டப்பிரிவு நிலத்தில் வசிக்கின்ற விவசாயிகள் சங்கம் அமைத்து ஒவ்வொரு முறையும் அரசியல்வாதிகளிடமும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.  இந்த நிலத்தில் வாழும் மக்களின் கைவசம் நிலத்திற்கு உரிமை ஆவணமும்,  வீடுகளுக்கு பட்டா வழங்கவும் கோரி  வருகின்றனர்.  கடந்த 2020 ஆம் ஆண்டு மேட்டுப்பாளையம் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த தற்போதைய முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தனர்.  நீண்ட காலமாக தொடரும் நிலப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் எனவும்,  பொது மக்களின் கோரிக்கை படி 10 ஆயிரத்து 552 குடும்பங்களுக்கு மின் இணைப்பு விவசாயிகளுக்கு பட்டாவும் வழங்கப்படும் என உறுதி அளித்தார்.

[11:32 am, 19/11/2024] +91 96777 06646: ஆனால் இதுவரை எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை என இப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். தமிழ்நாடு தனியார் வன பாதுகாப்பு சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கவும் 16 ஏ பிரிவின் கீழ் விவசாய நிலத்தை வனமாக மாற்றும். அரசாணையை திரும்ப பெற வேண்டும் எனவும் வனவிலங்குகள் ஊருக்குள்ள வந்து விவசாய பயிர்களை அழிப்பதை தடுக்கவும் மனித விலங்கு மோதலை தடுத்து இந்த பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கூடலூர் தொகுதி மக்கள் கோரி வருகின்றனர். மேலும் சட்டப்பிரிவு 17 நிலத்தில் உள்ள தேயிலை விவசாயிகளுக்கு மானிய சலுகைகள் வழங்க வேண்டும் என கூடலூர் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு தலைமையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் உறுதியளித்தனர். விவசாயிகளுக்கு சலுகைகள் வழங்க 20/9/2013,  22 .10 .2013 தேதிகளில் தேயிலை வாரியத்துக்கு ஆட்சேபனை தெரிவித்து வனத்துறை சார்பில் தேயிலை வாரியத்திற்கு கடிதம் அனுப்பியது.  இதன் அடிப்படையில் தேயிலை வாரியம் விவசாயிகளுக்கு வழங்கிய மானிய உதவிகளை கடந்த 10 ஆண்டுகளாக தடை செய்துள்ளது. எனவே தடையை விலக்கி  வனத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மானிய சலுகைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.  வனத்துறை குறைதீர் கூட்டத்தில் கூடலூர் சிறு தேயிலை விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் தலைவர் சளிவயல் ஷாஜி,  மற்றும் பொதுச் செயலாளர் ஆனந்தராஜா,  மனோகரன், பொருளாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

[11:32 am, 19/11/2024] +91 96777 06646: கடந்த 2022 ஆம் ஆண்டு கூடலூரில் நடந்த வாசனை திரவிய கண்காட்சியில் கலந்து கொண்ட நீலகிரி எம்பி. ஆ. ராசாவும் முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரனும் ஆறு மாதத்தில் பட்டா வழங்கவும் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்ய விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவித்தனர்.  ஆனால் ஆய்வுக் குழு அமைத்து சில பகுதிகளை மட்டும் ஆய்வு செய்து சென்ற பின்பும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை என தெரிவிக்கின்றனர்.  யானை மனித விலங்கு மோதலால் உயிரிழக்கும் அப்பாவி மக்களுக்கு இழப்பீடு உதவியாக ரூ. 10 லட்சமும்,  அவர்களின்  குடும்பத்திற்கு அரசு வேலையும் வழங்க இப்பகுதி  மக்கள் அரசின் கவனத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர். தற்போதைய தமிழக முதல்வர் அளித்த வாக்குறுதி படி சட்டப்பிரிவு 17 நிலத்தில் வசிப்போரின் அடிப்படை உரிமைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என  விவசாயிகள் பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

You Might Also Like

இன்னொரு கூவமாக மாறிவருகிறது ஏவிஎம் சானல் மீட்டெடுக்குமா தமிழ்நாடு அரசு?

சூலூரில் ராகுல் காந்தி 55 ஆவது பிறந்தநாள் விழா

மதுரை சோழவந்தானின் தீர்த்தவாரி திருவிழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்

பெருமாநல்லூர் மின் கட்டண போராட்ட உயிர் நீத்த தியாகிகளின் 55 ஆம் ஆண்டு நினைவு தின விழா

த.வெ.க தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாநகரத் தலைவர் சையது அசாருதீன் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
மதுரைமாவட்டம்

நேரில் ஆய்வு மேற்கொண்டார்

July 8, 2024 47 Views
தஞ்சாவூர் ரயில்வே நிலையத்தில் பயணங்களில் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் !!
முன்னாள் அமைச்சர் லூர்தம்மாள் சைமன் பிறந்த தினம்
திருப்பத்தூரில் தமிழக முதலமைச்சரின் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்
போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டியில் உள்ள ஜேசிபி உரிமையாளர் சங்கத்தினர் தொடர் வேலை நிறுத்த போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?