தமிழ்நாடு அனைத்து வணி கர் சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பில் (பேட்டியா) வர்த்தகம் மற்றும் வீட்டு உப யோக பொருட்கள் கண் காட்சி ஈரோடு பரிமளம் மகா லில் தொடங்கியது. நிகழ்ச்சிக்கு கூட்டமைப்பு தலைவர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். வி.சி. சந்திரகுமார் எம்.எல்.ஏ., மேயர் நாகரத்தினம் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். வீட்டுவசதி மற்றும் ஆயத்தீர் வைத்துறை அமைச்சர் முத்து சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டியும் குத்து விளக்கு ஏற்றியும் விழாவை தொடங்கி வைத்து விழா மலரை வெளியிட்டார்.
இந்த கண்காட்சியில் மேஜிக் ஷோ, பரத நாட் டியம், நடன போட்டிகள் போன்ற பல்வேறு போட்டிகள் நடக்கிறது. மற்றும் வர்த்தகம்- வீட்டு உபயோக பொருட்கள் தொழில் மற்றும் மருத்துவ முகாம் ரத்த தான முகாம் வேளாண் பொருட்கள் சூரிய ஒளி மூலம் இயங்கும் மின்சார பொருட்கள் தங்கம் வெள்ளி நகைகள் மற்றும் போன்றவை உள்பட 210 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.
போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கும் சிறந்த அரங் குகளுக்கும் பரிசுகள் வழங் கப்படுகிறது. நாளை வரை இந்த கண்காட்சி நடக்கிறது.
கண்காட்சியின் தலைவர் ஜிப்ரி செயலாளர் சின்னசாமி பொருளாளர் சிவகுமார் கூட்டமைப்பின் செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் முருகானந்தம்
மற்றும் சங்க நிர் வாகிகள் பலர் இதில் கலந்து கொண் டனர்.
இந்த கண்காட்சியை ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பேர் வந்து பார்வையிட்டு தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்கி சென்றனர்.



