மார்ச் :7
பிரதர்ஸ் ஸ்பீடு ஸ்கேட்டிங் அகாடமி நடத்திய மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டியானது கரூர் மாவட்டத்தில் 23 ஆம் தேதியன்று நடைபெற்றது இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அனுப்பர்பாளையம் புதூரில் படிக்கும் மாணவிகள் சாதனா.பிரித்திகா ஆகிய இரண்டு மாணவிகள் 12 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் பங்கேற்று இரண்டு தங்கம் இரண்டு வெள்ளி பெற்று நமது திருப்பூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். இவர்களை பெற்றோர்கள் மற்றும் இதன் பயிற்சியாளர் பிரகாஷ் ஆகியோர் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.



