கந்திலி:செப்:04, திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி தெற்கு ஒன்றியத்தின் சார்பில் திராவிட முன்னேற்றக் கழக பொது உறுப்பினர்கள் கூட்டம் கயல்நாயக்கன்பட்டி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு கந்திலி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் S.K.T. அசோக் குமார் பி.இ., அனைவரையும் வரவேற்று பேசினார்.
ஒன்றிய அவைத் தலைவர் M. துரைசாமி தலைமை வகித்தார். கந்திலி ஒன்றிய துணைச் செயலாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஒன்றிய P.பிரபு பி.காம் முன்னிலை வகித்தார்கள்.
இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட கழக செயலாளர் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி, மாவட்ட துணை செயலாளர்கள் T.K.மோகன், A.சம்பத்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் சிறப்புரை ஆற்றியபோது: எதிர்வரும் அண்ணா பிறந்த நாளையொட்டி சிறப்பாக கொண்டாட வேண்டும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதிதாக அதிகமான உறுப்பினர்களை சேர்த்து தமிழகத்தில் முன்னுதாரணமாக இந்த மாவட்டத்தை வளர்ச்சி பாதைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். வாக்காளர் பெயர் சேர்த்தல் நீக்கல் ஆகியவற்றின் மீது கவனம் கொண்டு கழக உறுப்பினர்களை முறையாக சேர்த்து கட்டமைப்பு செய்தல்.
பவள விழா கொண்டாடுதல் ஆகியவற்றை குறித்து பேசினார். நிகழ்ச்சியில் முறையாக தீர்மானம் இயற்றப்பட்டு நடைபெறும் என அறிவித்தார்.
மேலும் இக்கூட்டத்திற்கு தலைமை செயற்குழு உறுப்பினர் முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் கு. ராஜமாணிக்கம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் V. வடிவேல், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தே.பிரபாகரன், அச்சமங்கலம்A.M. பாண்டியன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய மாணவரணி இளைஞர் அணி , இலக்கிய அணி ,விவசாய அணி, பிரதிநிதிகள், கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.