நாகர்கோவில் – செப் – 07,
விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் நாளை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரிதிஷ்டை செய்யபட உள்ளது – அதற்காக நாகர்கோவில் மேல சூரங்குடியில் தயார் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் அனுப்பி வைக்கும் பணிகள் தொடங்கியது
இந்த ஆண்டின் புதிய வரவாக விதை விநாயகர் சிலைகள் அறிமுகம்.
சாதாரண விநாயகர் சிலைகள் ஊர்வலம் மரம் வளர்க்கும் சமூக சிந்தனை உருவாக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பு
இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் விநாயகர் சதூர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடபடுகிறது . அந்த வகையில் நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து மகா சபா, பா.ஜ.க. இந்து முன்னனி , சிவசேனா உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் கட்சியினர் அதற்காக விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணிகளில் இறுதிகட்டத்தில் உள்ளனர் . நாகர்கோவிலை அடுத்துள்ள மேல சூரங்குடியில் இந்து மகா சபா சார்பில் 1000 மேற்பட்ட பல்வேறு அம்சங்களிலான விநாயகர் சிலைகள் செய்து முடிவடையும் தருவாயில் உள்ளது. இங்கே விநாயகர் சிலைகள் தயார் செய்ய காஞ்சிபுரத்தில் இருந்து 15 சிற்பிகள் வருகை தந்து சிலைகள் தயார் செய்து வருகின்றனர் மயில் விநாயகர், அன்ன பறவை விநாயகர், கற்பக விநாயகர் என பல்வேறு அம்சங்களில் சிலைகள் வடிவைக்கபட்டுள்ளன இந்த ஆண்டின் புரிய வரவாக விதை விநாயகர் சிலை தயார் செய்து அறிமுகப்படுத்தி உள்ளனர் இதன் மூலம் சாதாரணமான விநாயகர் சிலை ஊர்வலத்தில் மரம் வளர்க்கும் சமூக சிந்தனை விதைக்கப்பட்டுள்ளதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு ஏற்பட்டுள்ளது என அகில பாரத இந்து மகா சபா மாநில தலைவர் மற்றும் தேசிய துணை தலைவர் த.பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறினார்.