தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் என் ஜி ஓ காலனியில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் பள்ளியான ஏ வி மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன் தலைமை வகித்தார் பள்ளிச் செயலர் ராஜகுரு, சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ் ,பள்ளி தலைமை ஆசிரியை பத்மா முன்னிலை வகித்தனர்.
இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டிகளை வழங்கி மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடினார் நிகழ்ச்சியில் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் உதயகுமார், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ஜலால் மற்றும் ஜெயக்குமார், பாலாஜி, ஜான்சன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.