அரியலூர், நவ;22
அரியலூர் (நெடுஞ்சாலை), கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, கோட்டத்தின் கட்டுபாட்டிலுள்ள செந்துறை உட்கோட்டத்தை சார்ந்த அரியலூர் – ஜெயங்கொண்டம் (வழி) செந்துறை சாலையில் செந்துறை முதல் பொன்பரப்பி வரை முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் இருவழிச்சாலையை நான்குவழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகளை நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணிதுறை அமைச்சர் அவர்களின் அறிவுரைபடி ,தலைமைப்பொறியாளர் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அவர்களின் வழிகாட்டுதல் படி அரியலூர் கோட்டப்பொறியாளர் (நெ) கட்டுமானம் மற்றும் பராமரிப்பு ஆய்வு செய்தார். பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடிக்க அறிவுரைகள் வழங்கினார் , மேலும் ஆய்வின் போது உடன் செந்துறை உதவிக்கோட்டப் பொறியாளர், செந்துறை உதவிப் பொறியாளர் உடன் இருந்தனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்